சிறுமியிடம் பாலியல் தொல்லை: கோயில் அர்ச்சகர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 22, 2020

சிறுமியிடம் பாலியல் தொல்லை: கோயில் அர்ச்சகர் கைது

சென்னை, மே22  சென்னை உள் ளகரம் கிருஷ்ணா நகர் இணைப்பு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 59). சென்னை அண்ணாசாலை யில் எல்அய்சி பின்புறம் உள்ள ஒரு அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். 


இவர், நேற்று தனது வீட் டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத் ததாகக் கூறப்படுகிறது. அங் கிருந்து தப்பி ஓடிவந்த சிறுமி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினாள்.


ஆத்திரமடைந்த பெற் றோர், சிவக்குமாரை வீட் டில் வைத்து பூட்டிவிட்டு, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர், சிவக்குமாரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மகளிர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போக்சோ சட் டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


No comments:

Post a Comment