சென்னை உயர் நீதிமன்றம் அளித்த  தீர்ப்பின் சிறப்பு அம்சங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 28, 2020

சென்னை உயர் நீதிமன்றம் அளித்த  தீர்ப்பின் சிறப்பு அம்சங்கள்


மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப் பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சிறப்பு அம்சங்கள்:


தீர்ப்பு அளித்த நாள்: 27.7.2020



  1. மாநில சட்டங்களின் அடிப்படையில் இட ஒதுக் கீட்டை அளித்திட, இந்திய மருத்துவக் குழு இயற்றிய விதிகள் [(9(4), 5(5)], அகில இந்தியத் தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை மறுக்க வில்லை. (பாரா 85).

  2. மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்திய மருத்துவக் குழு, பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்தியத் தொகுப் பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு எந்த விதியையும் குறிப்பிட இயலவில்லை. (பாரா 86).

  3. ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக் கொள் கையைச் சட்டமாக்குவதற்கு மத்திய அரசுக்கு அதி காரங்கள் உள்ளன. அதன் சட்டமன்ற அதிகாரங் களைப் (Legislative Powers) பயன்படுத்துவதில் இருந்து தடுக்கப்பட வில்லை. (பாரா 87)

  4. யுஜி / பிஜி மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் பங்களித்த அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு இடஒதுக்கீடு வழங்க எந்தச் சட்டமோ அல்லது அரசமைப்புச் சட்டமோ தடை யாக இல்லை. (பாரா 90).

  5. அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இடஒதுக் கீடு இல்லை என்பதை மாநில அரசுகள் அறிந்தி ருப்பதாக MCI-இன் வாதத்துக்கு மறுப்பாகத் தமிழக அரசு இட ஒதுக்கீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. (பாரா 95).

  6. இந்திய மருத்துவக் குழு, மாணவர் சேர்க் கைக்கான தரங்களை நிர்ணயிக்க முடியும். ஆனால், இடஒதுக்கீட்டுக் கொள்கை அரசாங்கத்தின் சட்டத் தின் மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தின் உத்தரவு மூலமாகத்தான் செய்யப்பட வேண்டும். (பாரா 97).

  7. தமிழக மனுதாரர்களின் மனுவில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் கோரப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் யோசனைக்கு மாறாக உள்ளது. (பாரா 98).

  8. சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றைப் பாதுகாப் பதற்கான முந்தைய வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை எம்.சி.அய்.யும் மத்திய அரசு புறக் கணிக்க முடியாது. (பாரா 102).

  9. இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க மத்திய அரசுக்கு அரசமைப்புக் கடமை உள்ளது. இது இப் போது அவசியமாக உள்ளது. (பாரா 104).

  10. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு- (மத்திய அரசின் சுகாதாரச்  செயலாளர், எம்.சி.அய். மற்றும் தமிழக அரசின் சுகாதாரச் செயலாளர்) இட ஒதுக்கீடு சதவிகிதத்தை முடிவு செய்ய  அமைக்கப்பட வேண்டும்.

  11. செயல்படுத்தல் தற்போதைய கல்வியாண்டில் அல்ல, எதிர்கால ஆண்டுகளிலும் செய்யலாம். (பாரா 105).

  12. இடஒதுக்கீடு சதவிகிதத்தை அமல்படுத்துவது தொடர்பான குழுவின் வழிமுறைகளை மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் அறிவிக்க வேண்டும். (பாரா 106).


தொகுப்பு: கோ.கருணாநிதி


No comments:

Post a Comment