வாஷிங்டன், ஆக.23 அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று, கரோனாவைத் தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித் துள்ளது.
உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிற கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக் கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வரு கின்றன.
இந்த நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று, கரோனாவைத் தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித் துள்ளது. அதன்பேரில் இந்த களிம்பு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிசோதனைக்கூட அறிக்கை, இந்த களிம்பைத் (மூக்கில்) தடவிக்கொண்ட 30 வினாடிகளுக்குப் பிறகு எந்த வைரஸ் தொற்றும் கண் டறியப்படவில்லை என கூறுகிறது. இந்த களிம்பு ‘டி3எக்ஸ்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment