பெரும் பித்தலாட்டமும், அயோக்கியத்தனங்களும், மோசடிகளும் நிறைந்துள்ள ஜனநாயக ஆட்சியின் யோக்கியதையைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்கிறார்கள். இப்படி ஆட்சியின் கொடுமைகளையும், நாணயமற்ற தன் மைகளையும், யோக்கியமற்றவைகளையும் ஆராய்ந்து பார்த்துக் கூறுகிறவன் தேசத் துரோகி என்று அழைக்கப்படு கிறான். எதற்கு ஆட்சி முறை? மக்களின் நன்மைக்கென்று தானே அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது? அப்படி அமைக்கப்பட்டிருப்பதில் உள்ள குற்றங் குறைகளை எடுத் துக் கூறுதல் கூடாது என்றால், அப்பேர்ப்பட்ட ஆட்சியால் மக்கள் என்ன பலனை எதிர்பார்க்க முடியும்?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 22.03.1955
‘மணியோசை’
No comments:
Post a Comment