ஈரோடு  - 41 சந்தா, நாமக்கல் - 36 சந்தா, கரூர் - 34 சந்தா மொத்தம் 111 விடுதலை சந்தாக்களை  (ரூ.99,940) கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 23, 2020

ஈரோடு  - 41 சந்தா, நாமக்கல் - 36 சந்தா, கரூர் - 34 சந்தா மொத்தம் 111 விடுதலை சந்தாக்களை  (ரூ.99,940) கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கப்பட்டது

கரூர் மாவட்ட தலைவர் ப.குமாரசாமி, மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் சே.அன்பு, கட்டளை வைரவன் மா.ஜெகநாதன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், மாவட்ட ப.க தலைவர் பொம்மன், மாவட்ட இளைஞரணி தலைவர் தே.அலெக்சாண்டர், மாவட்ட துணைச்செயலாளர் வே.இராஜீ, நகர தலைவர் க.சதாசிவம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குமார், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் நை.சபாபதி, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் அரியநாயகம், மாவட்ட மகளிர் அணி தலைவர் ராஜாமணி, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ராஜா  ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமாரிடம்  34 விடுதலை சந்தா, ஒரு உண்மை சந்தா (ரூ.53,450)வழங்கினர். கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 22-11-2020 அன்று மாலை 5 மணிக்கு கரூர் காந்திகிராமம் குமார் டைலர் கடையில் கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் தஞ்சை இரா ஜெயக்குமார் மற்றும் அமைப்பு செயலாளர் ஈரோடு சண்முகம் ஆகியோர்களிடம் 34 சந்தாக்களை  தொகை 53 ஆயிரத்து 450 வழங்கப்பட்டது. உடன்: மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் காமராஜ், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் அரவிந்த், விடுதலை வாசகர் வட்ட துணைத் தலைவர் அரியநாயகம், கரூர் மாவட்ட தலைவர் குமாரசாமி, செயலாளர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.அன்புகட்டளை வைரவன், மாவட்ட மகளிரணி தலைவர் ராஜாமணி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜு, மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், செயலாளர் ஜெகநாதன், அமைப்பாளர் காந்திகிராமம் குமார், துணை அமைப்பாளர் சபாபதி, கரூர் நகர அமைப்பாளர் ராஜா, கரூர் நகர செயலாளர் கானா சதாசிவம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், செயலாளர் ஸ்ரீதரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பொம்மன். 


ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 22.11.2020 ஞாயிறு அன்று கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில்   அமைப்பு செயலாளர் த.சண்முகம் மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஈரோடு தே.காமராஜ்  பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் அரவிந்தன் விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர்.  9.30 மணிக்கு ஈரோட்டில் தொடங்கி பள்ளிபாளையம், ப.குமாரபாளையம், நாமக்கல், பொத்தனூர் ஆகிய ஊர்களுக்குச் சென்று இரவு 7.00மணிக்கு கரூரில் சந்தா திரட்டும் பணி  முடிவடைந்தது. 111 சந்தாக்கள் சேகரித்து ரூ.99,940 வழங்கினர்.  மாவட்ட ஒன்றிய நகர, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் மற்றும்  அனைத்து கட்சி நண்பர்களும் சந்தாக்களை வழங்கினர்.


கரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.குமாரசாமி 23 விடுதலை சந்தாவையும்,  1 உண்மை சந்தா (36,800), கரூர் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ம.ஜெகன்நாதன் ஆகியோர் 7 விடுதலை சந்தாவையும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கட்டளை வைரவன்  4 விடுதலை சந்தாவையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர்.


No comments:

Post a Comment