ஒற்றைப் பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 22, 2020

ஒற்றைப் பத்தி

பார்ப்பனருக்கு


அழும் தானங்கள்!


மத்ஸ்ய புராணத்தில் பிராமணர்களுக்குத் தர வேண்டிய பதினாறு மகாதானங்கள்பற்றி கீழ்வரும் விளக்கம் தருகிறது.


துலா புருஷ தானம்: பிராமணனின் எடைக்கு அல்லது தானம் தருபவனின் எடைக்கு விலை உயர்ந்த உலோகம் கொடுப்பது.


ஹிரண்ய கர்ப்ப தானம்: தங்க ஆபரணம் தருவது.


பிராமந்த தானம்: முட்டை வடிவத்தில் தங்கம் தருவது


கல்பதருதானம்: பிராமணர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் முறையில் தங்க மரம் தருவது.


கோஸஹஸ்ர தானம்: ஆயிரம் பசுக்கள் தானம் தருவது.


ஹிரண்ய காமதேனு தானம்: விரும்பியவை தரும் காமதேனு பசு கன்று தங்கத்தில் தருவது.


ஹிரண்ய அஸ்வ தானம்: தங்க குதிரைகள் தருவது.


ஹிரண்ய ஸ்வரத் தானம்: தங்க குதிரைகள் பூட்டிய ரதம் தருவது.


ஹேமஹஸ்தி தானம்: தங்க யானை தானம் தருவது.


பஞ்சலாங்கல தானம்: அய்ந்து கலப்பைகள் மரத்தாலும், காளை மாடுகள் தங்கத்தாலும் தருவது.


தார தானம்: பூமி, மலை வடிவத்தில் தங்கம் தருவது.


விஸ்வ சக்ர தானம்: தங்க சக்கரம் தானம் தருவது.


கல்பலதா தானம்: பூக்களோடு கூடிய பத்து படர்ந்த கொடிகள் தங்கத்தில் செய்து தருவது.


சப்த சாகர தானம்: ஏழு கடல்கள் போன்ற வடிவத்தில் தங்க பாத்திரங்கள் தருவது.


ரத்னதேனு தானம்: ஆபரணங்களைக் கொண்டு செய்யப்பட்ட பசு தருவது.


மகா பூதகாத தானம்: தங்கத்தால் செய்யப்பட்ட 100 விரல்கள் அகலமுள்ள பெரும் தங்கப் பாத்திரத்தில் பால், வெண்ணெய் நிரப்பித்தருவது.


இவ்வாறு மத்ஸ்ய புராணம் கூறுகிறது.


எம்.வி. சுந்தரம் எழுதிய “சாத்திரப் பேய்களும்


ஜாதிக் கதைகளும்'' -


ஒரு மார்க்ஸியப் பார்வை, நூலின் பக்கம் 60-61)


பார்ப்பனர்கள்பற்றி ‘‘பேராசை பெருந்தகையே போற்றி'' என்று அண்ணா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.


 - மயிலாடன்


No comments:

Post a Comment