தென்சென்னை மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 3, 2020

தென்சென்னை மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்


திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் பங்கேற்ற தென்சென்னை மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி இல்லத்தில், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் வி.தங்கமணி தலைமையில் நடைபெற்றது. புதிய மாணவர் கழக பொறுப்பாளர்களுக்கு புத்தகங்களை வடுவூர் முனைவர் சிவசுப்ரமணியம் வழங்கி மகிழ்ந்தார்.  வடசென்னை மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டம், மண்டல செயலாளர் தே.செ.கோபால் தலைமையில் கொடுங்கையூரில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. சட்டக் கல்லூரி மாணவர்கள் பாலாஜி, அப்பாஸ், மாணவர் கழகத்தில் இணைந்தனர். புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். (1.11.2020)


No comments:

Post a Comment