வழக்குரைஞர் இரா.பெருமாள் மறைவு: தமிழர் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 6, 2020

வழக்குரைஞர் இரா.பெருமாள் மறைவு: தமிழர் தலைவர் இரங்கல்


தஞ்சாவூர்,சீனிவாசபுரத்தில் வசித்து வரும் மூத்த வழக்குரைஞர் இரா.பெருமாள் (வயது 92) உடல்நலக்குறைவால்  நேற்று (5-11-2020) மாலை 6 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இன்று (6-11-2020) பகல் 12 மணியளவில் இறுதி நிகழ்வு நடை பெற்றது.  மறைந்த வழக்குரைஞர்  இரா.பெருமாள்  ஒரத்தநாடு ஒன்றியம் (அவரது சொந்த கிராமம் )தென்னமநாடு தருமாம்பாள் இராமசாமி கலை அறிவியல் கல்லூரி நிறுவனர் ஆவார். மறைவு தகவல் அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மறைந்த பெருமாள் அவர்களின் மகன் வழக்குரைஞர் பெ.மோகன்தாஸ் காந்தியிடம் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment