இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 4, 2020

இன்றைய ஆன்மிகம்

இன்றைய ஆன்மிகம்?


பார்ப்பனீய பாதுகாப்பின் சூட்சமம்!


தீபாவளியன்று விடியற்காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, நரக வேதனையைப் போக்க முள் செடியுடன் நாயுருவி செடியைக் கொண்டு தலையைச் சுற்றி ஸ்நான காலத்தில் எறிய வேண்டும்.


காலையில் யமதர்ப்பணம் செய்வதும் வழக்கம்.


இதன் மந்த்ரம் -


யமாய நமஸ் தர்ப் பயாமி


தர்மராஜாய நமஸ் தர்ப்பயாமி


ம்ருத்யவே - தர்ப்பயாமி


அந்தகாய - தர்ப்பயாமி


வைவஸ்வதாய தர்ப்பயாமி


காலாய - தர்ப்பயாமி


ஸர்வ பூதக்ஷாயாய - தர்ப்பயாமி


ஔதம்பராய - தர்ப்பயாமி


சித்ராய - தர்ப்பயாமி


சித்ரகுப்தாய - நமஸ்தர்ப்பயாமி


என்று எள்ளைக் கொண்டு, தீபாவளியன்று நீரினால் இத் தர்ப்பணம் செய்தால், யமதர்ம ராஜாவின் திருப்தியால், நாம் ஒரு வருடம் செய்யும் பாபம் விலகுகிறது என்பது சாஸ்த்ரோக்த தாத்பர்யம். ஆகவே, காரண, காரியமறிந்து தித்திக்கும் தீபாவளிப் பண்டிகையைச் சிறப்புடன் கொண்டாடி மகிழ்வோமாக!


- ‘மங்கையர் மலர்', நவம்பர் 1-15 (2020).


ஒரு பண்டிகையை வைத்து எப்படி எல்லாம் மூடநம்பிக்கையைப் பரப்புகிறார்கள் பார்த்தீர்களா?


எமதர்ம ராஜாவாம் - அப்படி ஒருவன் இருக்கின்றானா?


இந்த 2020 லும் மூடநம்பிக்கையைப் பரப்பினால்தான் பார்ப்பனீயத்தின் சரக்கு செல்லுபடியாகும் என்பதுதான் இதன் சூட்சமம்!


No comments:

Post a Comment