முதியோர்களின்  உடல் நலப் பிரச்சினைகளுக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவமனை துவக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 20, 2020

முதியோர்களின்  உடல் நலப் பிரச்சினைகளுக்கு சிறப்பு சிகிச்சை மருத்துவமனை துவக்கம்

சென்னை, நவ. 20-  கோவிட் 19 தொற்றுநோய் காலத்தில் முதியோர்களுக்கு வழங்கப்படும்கவனிப்பின் குறைபாடுகள் குறித்து தெரிய வந்துள்ளது.


இதற்காக சென்னையில் முதியோர்களின் உடல் நலப் பிரச்சினைகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்க ஜெரிகேர் மருத்துவமனை துவக்கபட்டு உள்ளது.  இந்த மருத்துவ மனையை பிரபல மருத்துவர் கள்  டாக்டர் வி.எஸ். நட ராஜன், டாக்டர் எஸ். தணிகா சலம். டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், நிர்வாக இயக் குனர் காவேரி மருத்துவமனை, ஆகியோர் துவக்கி வைத்தனர்.


ஜெரிகேர்மருத்துவமனை இயக்குனர்கள் டாக்டர் சிறீனிவாஸ் மற்றும் டாக்டர் லட்சுமிபதி ரமேஷ் கூறுகை யில், "உடல்நலப் பிரச்சினை கள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் முதி யோர்களுக்கு அதிக கவனிப்பு தேவைபடுகிறது. முதியோர் களின் மருத்துவ சிகிச்சைகளை  நிர்வகிப்பதில் மருத்துவ ஊழியர்களும் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.முதியோர்க ளுக்கான சிறப்பு பிரத்யேக மருத்துவமனைஅவசியம் என்பதை உணர்ந்து  ஜெரி கேர் மருத்துவமனை துவக்கி உள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment