கலைத்திறன் காட்சிப்படுத்தும் போட்டியில் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 30, 2020

கலைத்திறன் காட்சிப்படுத்தும் போட்டியில் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வெற்றி

ஜெயங்கொண்டம், டிச. 30- 2020--21 மாநில அளவிலான கலா உத்சவ் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவி வெற்றி வாகை சூடினார். மாணவர் களுக்கு பாரம்பரிய செவ்வி யல் மற்றும் நாட்டுப்புறக் கலை வடிவம் பற்றிய அறி முகத்தையும் புரிதலையும் உரு வாக்கி அதன் மூலம் அவர்க ளின் கலைத்திறனை காட்சிப் படுத்த கலா உத்சவ் போட்டி கள் நடத்தப்பட்டு வருகின்றன.

14.-12.-2020 அன்று இணையதளம் மூலம் மாநில அளவில் நடத்தப்பட்ட (உள் ளூர்  தொன்மை பொம்மை கள்/வரலாறுகள்) கலா உத் சவ் போட்டியில் ஜெயங் கொண்டம்  பெரியார் பள்ளி மாணவி .சி.ஜெயவர்தினி மூன்றாம் இடம் பெற்றுள் ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கப்படுகிறது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு  பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் இரு பால் ஆசிரியர்களும் பெற் றோர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment