தி.மு.க ஆட்சி அமையவேண்டும் - ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 8, 2021

தி.மு.க ஆட்சி அமையவேண்டும் - ஏன்?

வடக்குத்து - இந்திரா நகரில் கழக சார்பில் கருத்தரங்கம்

வடக்குத்து, பிப். 8- வடக்குத்து இந்திரா நகரில் பெரியார் படிப்பகம் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் -தி.மு.. வெற்றி பெற வேண்டும் -ஏன்? என்னும் கருத்தரங்கம் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ரேவந்த் ஆண் டனி தலைமையில்  மாவட்ட தலைவர் தண்டபாணி முன் னிலையில் 7.2.2021 ஞாயிறு மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடந்தது. கிளைக் கழக தலைவர் தங்க.பாஸ்கர் வர வேற்றார்.

கழக பொதுச் செயலாளர் முனைவர் துரைசந்திரசேக ரன் தொடக்கி வைத்துப் பேசினார். தி.மு.. தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தி கருத்தரங்க உரையாற்றினார். இரா.மாணிக்க வேல் பாடல்கள் பாடினார். நா.உதயசங்கர், தமிழ்மணி, டிஜிட்டல் ராமனாதன், மாவட்டஅமைப்பாளர் மணிவேல், விசயா, கலைச் செல்வி, திராவிடமணி, வெங்கடாசலம், நா.பாவேந்தர் விரும்பி ஆகியோர் பேசினர். முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment