செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 11, 2021

செய்தியும், சிந்தனையும்....!

புளித்துப்போன வார்த்தைகள்

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அச்சம் தேவையில்லை : - விவசாயிகளுக்குப் பிரதமர் உத்தரவாதம்.

கேட்டுக் கேட்டு மக்களுக்குப் புளித்துப் போய்விட்டது. வேறு ஏதாவது உருப்படியான முடிவு தேவை!

யார் சதியாளர்?

.தி.மு..வைக் கைப்பற்ற சதி! : - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

நீண்டகாலமாக பா...தான் அதைச் செய்துகொண்டு இருக்கிறது - காலந்தாழ்ந்துதான் முதலமைச்சர் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார் போலும்!

எது முக்கியம்?

ஆண்டுக்கு இருமுறைநீட்' தேர்வு.

எத்தனை முறைநீட்' தேர்வு என்பது முக்கியமல்ல - ‘நீட்'டே தேவையில்லை என்பதுதான் மக்களின் முடிவு. எத்தனை முறை சொன்னாலும் - இதனை மத்திய அரசு புரிந்துகொள்ளாதது போல நடிக்கிறது என்பதுதான் உண்மை - காரணம், இது உயர்ஜாதிக்காரர்களுக்காக கார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படும் அரசு.

குடைச்சலுக்கே! 

ஆளுநர் கிரேண்பேடியைத் திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குடியரசுத் தலைவரிடம் புகார் மனு.

குடைச்சல்களை சதா கொடுத்துக் கொண்டு இருக்கவேண்டும் என்பதற்காகத்தானே ஆளுநராக கிரண்பேடியை மோடி அரசு நியமித்திருக்கிறது.

 

No comments:

Post a Comment