சென்னையில் ஓடும் கூவம் ஆறு சுத்தப்படுத்தப்பட்டு, நீர் வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுத் தும் வகையில் சீரமைக்கப்படும்.
- பா.ஜ.க. தேர்தல் அறிக்கை (பக்.25)
கங்கை ஆற்றை சுத்தப்படுத் துவதாகக் கூறி 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதே - சுத்தப் படுத்தப்பட்டதா? ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டது யாருக்காக?
***
சட்டங்களை, விவாதிக்கும் விசயத்தில் அறிவார்ந்த பல்வேறு துறைகளின் நிபுணர்களடங்கிய சட்ட மேலவை இருப்பது பயனுள்ளதாக இருப்பதால் சட்ட மேலவை மீண்டும் கொண்டு வரப்படும். பா.ஜ.க. தேர்தல் அறிக்கை (பக்.25)
சட்ட மேலவையை ஒழித்ததே எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்தான். அந்தக் கட்சியோடு கூட்டு சேர்ந்து கொண்டு, மேலவையைக் கொண்டு வருவார்களா? நல்ல கூட்டு - நல்ல பொரியல்!

No comments:
Post a Comment