பெரியார் கேட்கும் கேள்வி! (328) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 12, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (328)

மனித சீவனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் எண்ணும் தன்மான மாகிய சுயமரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், மனிதன், மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத்தன்மையாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறானா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment