கருநாடக மாநிலத்தில் அரசியல் நெருக்கடி - உட்கட்சிக் குழப்பம். முதலமைச்சர் எடியூரப்பா பதவி விலகத் தயார் என்று அறிவிப்பு!
பேசுவது நோபல் அறிஞர் அமர்த்தியாசென்
கரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் தாங்கள் செய்யும் பணிகளுக்குப் புகழாரம் சூட்டிக் கொள்வதில்தான் பா.ஜ.க. அரசு அக்கறை காட்டுகிறது. இதன் விளைவால் நாடு மோசமான நிலையில் சிக்கிக் கொண்டுள்ளது.
மேற்கு வங்க அரசியல்
திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க. வுக்குச் சென்ற முகுல் ராயும், அவரது மனைவி யும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் இருக்கின்றனர்.
அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் முதலமைச்சர் மம்தா செய்து வருகிறார். முகுல்ராயின் மகன் நெக்குருகிப் போய்விட்டார். மீண்டும் முகுல்ராய் திரிணா முல்லுக்குச் செல்லுவார் என்ற பேச்சு அங்கு பலமாக அடிபடுகிறது.
கூறுவது சீதாராம் யெச்சூரி (சி.பி.எம். தேசிய பொதுச்செயலாளர்)
27 விழுக்காடு இந்தியர்கள் வறுமையில் தள்ளப் பட்டுள்ளனர். அதே சமயத்தில் மோடியின் கள்ளக் கூட்டாளிகள் - முதலாளிகள் ஆசியாவிலேயே பெரும் பணக்காரர்களாக உருவாகிவிட்டனர்.
மீண்டும் அரசிடம்...
1980 இல் தனியார் மயமாக்கப்பட்ட இரயில்வே துறை இங்கிலாந்தில் மீண்டும் அரசு கட்டுப்பாட்டுக்கு வருகிறது.
No comments:
Post a Comment