ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 5, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 5.6.2021 இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· மராட்டிய இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இடைநிலை ஜாதிகளுக்குள் உள்ள சமத்துவ மின்மையை புறக்கணிக்கிறது என பேராசிரியர் கிறிஸ்டபி ஜாப்ரலெட் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

தி டெலிகிராப்:

 · கரோனா பரவலை தவறாக கையாண்டவிதம் மற்றும் மேற்கு வங்க தேர்தல் படுதோல்வி பாஜகவின் உயர் மட்டத்தை உலுக்கியுள்ளது.

இந்துஸ்தான் டைம்ஸ்:

· உச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்புகளை மீறுவதற்கு  நாடாளு மன்றத்திற்கு உரிமை உண்டு என மத்திய அரசின் வழக்குரைஞர்  .ஜி.வேணுகோபால் தெரிவித்தார்.

டெக்கான் ஹெரால்டு:

· அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக அளிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்திட வேண்டும் என நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

 - குடந்தை கருணா

No comments:

Post a Comment