20 ஆயிரம் பேருக்கு வேலைத் திட்டம்: பேடிஎம் நிறுவனம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

20 ஆயிரம் பேருக்கு வேலைத் திட்டம்: பேடிஎம் நிறுவனம் அறிவிப்பு

புதுடில்லி, ஜூலை 30 மின்னணு பணப் பரிவர்த்தனை சேவையில் ஈடுபட்டுள்ள பேடிஎம் நிறுவனம், 20 ஆயிரத்திற்கும் அதிகமான கள விற்பனை அதிகாரிகளை நியமிக்க உள்ளது

யு.பி.அய்., க்யூஆர் கோடு உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் அலைபேசிகள் மூலம் பல்வேறு சேவைகளுக்கான பணம் செலுத்தும் வசதியை, பேடிஎம் வழங்குகிறது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பாய்ன்ட் ஆப் சேல் இயந்திரம் வாயிலான, டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் பேடிஎம் உதவுகிறது.

இந்நிறுவனம், அக்டோபரில் பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. அதனால், நாடு முழுதும் பேடிஎம் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான இளங்கலை பட்டதாரிகளை, கள விற்பனை அதிகாரிகளாக நியமிக்க உள்ளது. இவர்கள், பேடிஎம் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களிடம் எடுத்துச் செல்லும் பணியையும் மேற்கொள்வர்.

இதன் வாயிலாக ஒருவர், மாதம் 35 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ‘போன் பி, கூகுள் பேஉள்ளிட்ட நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க, பங்கு வெளியீட்டில் திரட்டும் நிதி வாயிலாக வர்த்தகத்தை விரிவுபடுத்த பேடிஎம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment