தஞ்சை நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கு.பரசுராமன் அவர்கள் விடுதலை, திராவிடப் பொழில் இதழ்களுக்கு ஆண்டு சந்தாக்களை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் அவர்களிடம் அளித்தார். உடன் உரத்தநாடு ஒன்றியச் செயலாளர்ஆ.இலக்குமணன்.
ஆத்தூர் மாவட்டம் புனல்வாசல் கிராமத்தில் திராவிட மாணவர் கழகம் புதிய கிளை தொடங்கப்பட்ட நிலையில் அந்த மாணவர் கழகக் கிளைக்கு விடுதலை நாளிதழ் ஆறுமாத அன்பளிப்பாக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆசிரியர் முருகானந்தம் சந்தா தொகை 900 ரூபாயை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் அவர்களிடம் அளித்தார்.

No comments:
Post a Comment