* சிவகங்கை மாவட்டம் கழகப் பொதுக்குழு உறுப்பினர் சிவகங்கை வீர.ஜெயராமன் (வயது 74) அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவுநாள் (1.9.2021) நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன் ரூ.200 நன்கொடை வழங்கினார். வீர.ஜெயராமன் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு 6 மாதம் சிறை தண்டனை அனுபவித்தவர். அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகும் போராட்டத்திலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* மதுரை திருப்பாலை பகுதி திராவிடர் கழக அமைப்பாளர் இரா.அழகுப்பாண்டியின் தாயாரும், மதுரை மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் அ.அல்லிராணியின் மாமியாருமான இரா.இருளாயி அம்மாள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நினைவாக நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கப்பட்டது.


No comments:
Post a Comment