ஜப்பான் விண்வெளி வீரர் 5ஆவது முறையாக பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

ஜப்பான் விண்வெளி வீரர் 5ஆவது முறையாக பயணம்

டோக்கியோ, அக். 14- ஜப்பான் விண் வெளி வீரர் கொய்ச்சி வகடா விண்வெளிக்கு 5ஆவது முறையாக அடுத்தாண்டு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பயணிக்க உள்ளார். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் 5ஆவது விண்வெளி பயணமான `டிராகன்அடுத்தாண்டு பன்னாட்டு விண் வெளி ஆய்வு மய்யத்துக்கு செல்ல உள்ளது. இதில் பயணிப்பதற்காக ஜப்பான் விண்வெளி வீரர் கொய்ச்சி வகடா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட் டுள்ளார். இது அவரது 5ஆவது விண்வெளி பயணமாகும்.

இதற்கு முன்பு, அவர் 1996, 2000, 2009ஆம் ஆண்டுகளில் 3 முறை அமெரிக்காவின் விண்கலம், 2013ஆம் ஆண்டில் ரஷ்யாவின் விண்கலத்தில் பன்னாட்டு விண் வெளி மய்யத்துக்கு சென்று திரும்பி உள்ளார். வரும் 2022ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் டிராகன் விண்கலத் தில் 5ஆவது முறையாக பயணிக்க உள்ளார்.

இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பும் 5ஆவது விண்கலம் என்பது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம், தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஜப்பான் விண் வெளி வீரர்கள் விண்வெளி செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக வகடா விடுத்த அறிக்கையில் கூறி யுள்ளார். இவருடன் நாசா வீரர் கள் நிகோல் மேன், ஜோஷ் கசடா ஆகியோரும் விண்வெளி மய்யத் துக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment