கரோனா பரவாமல் இருக்க கை கழுவுதல் முக்கியம் ஓமந்தூரார் மருத்துவமனை தலைவர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

கரோனா பரவாமல் இருக்க கை கழுவுதல் முக்கியம் ஓமந்தூரார் மருத்துவமனை தலைவர் தகவல்

சென்னை,அக்.15- சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில்உலக கைகள்கழுவும் தினம்’  கடைப் பிடிக்கப்பட்டது. அப்போது நடை பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் மருத்துவமனை டீன் ஆர். ஜெயந்தி தலைமையில் மருத்து வர்கள் உள்ளிட்ட அனை வரும்கைகள் சுத்தம்வேண்டும் நித்தம்எனும் கோட்பாட்டுடன் கைகள் கழுவு வதன் முக்கியத்துவதை அனை வரும் அறியும் வகையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும்அறியும் வகையில் கைகழுவும்முறைகள் பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கைகள்கழுவுவ தால் ஏற்படும் நன்மைகள் பற்றி மாணவர்கள் குறுநாடகம் மற்றும் நடனம் மூலம் விளக்கினர்.

கைகள் கழுவ சோப்பு வாங்க வசதியற்ற ஏழை மக்களுக்காக பெரிய பெட்டி ஒன்றை வைத்துசோப்பு வங்கிதிறக்கப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் நன்கொடையாக அளிக்கும் சோப்பு களை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக ஏழை மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட வுள்ளது.

நிகழ்ச்சியில் டீன் ஜெயந்தி பேசும்போது, “கைகளை முறையாக கழுவுவதன் மூலம் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள்காமாலை, சீதபேதி, டைபாய்டு போன்ற நோய்களை 33% குறைக்க முடியும். கரோனா பரவாமல் இருக்க கைகழுவுதல் முக்கியம் ஆகும்என்றார்.

மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் யு.சுகுணாபாய், சமூக மருத் துவத் துறை பேராசிரியர் அருண் குருகன், ஒருங்கிணைப்பு அலுவலர் ரமேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment