சென்னை, நவ. 4- இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆம்னி - சேனல் அய்-வேர் பிராண்டான லென்ஸ்கார்ட், தமிழ்நாட்டில் அதன் 100ஆவது விற்பனையகத்தை மதுரை யில் தொடங்கியது.
இந்த மாதம் உலகளாவிய வளர்ச்சி தொழில்நுட்ப முதலீட் டாளர்களிடமிருந்து மொத்தம் 315 மில்லியன் டாலர்கள் பரிவர்த் தனையை நிறுவனம் சமீபத்தில் முடித்தது.
இதன் மூலம், நிறுவனம் தனது சில்லறை வர்த்தகத்தை வரும் மாதங்களில் தெற்கு இந்தியாவில் மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது. வரவிருக்கும் 3, 4 ஆண்டு களில் அதிவேகமாக வளர்ந்து தேசிய அளவிலும் உலக அளவிலும் அதன் இருப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற் றும் இந்த நிதியாண்டில் 300க்கும் மேற்பட்ட கடைகளுடன் அதன் தேசிய தடத்தை அதிகரிப்பதை பிராண்ட் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
கூடுதலாக, இந்த பிராண்ட் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும், உயர்தரத்தை கொண்டு வரும் அதே வேளையில் வாடிக்கையாளர் அனுபவத்தை பராமரிக்க பலதரப்பட்ட மற்றும் பிரத்தியேகமான பணியாளர்களுக் கான கொள்கைகளை பின்பற்று வதையும் பார்க்கிறது.
100ஆவது விற்பனையகத்தின் துவக்கம் குறித்து லென்ஸ் கார்ட்டின் கிளை கள் விரிவாக் கத்தின் முதன்மை அதிகாரியான சுனில் மேனன் கருத்து தெரிவிக் கையில், “எங்களின் 100ஆவது ஸ்டோரை தமிழ்நாட்டில் தொடங்குவதன் மூலம், எங் கள் நிறுவனம் கண்-கண்ணாடி களை அணுகக்கூடியதாகவும், தென் இந்தியாவில் மற்றும் அதற்கு அப் பாலும் உள்ள அனைத்து நுகர் வோருக்கும் கிடைக்கச் செய் வதை நோக்கமாகக் கொண்டுள் ளது.
லென்ஸ்கார்ட்டில், அடுத்த 2, 3 ஆண்டுகளில் இந்தியாவில் 50% பேருக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம். எங்களின் ஆம்னி-சானல் மூலோபாயத்தில் தொழில்நுட் பத்தை தொடர்ந்து ஏற்றுக்கொள்வ தன் மூலமும், இணைத்துக்கொள் வதன் மூலமும், நாட்டிலும் வெளி நாட்டிலும் பார்வை பராமரிப்பு தேவையை நாங்கள் பூர்த்தி செய் துள்ளோம்” என்றார்.
No comments:
Post a Comment