சிறுபான்மை மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

சிறுபான்மை மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தகவல்

சென்னை, ஏப்.25 சட்டப் பேரவையில் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக் கைமீதான விவாதத்தில் 22.4.2022 அன்று அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பதில் அளித்து கூறியதாவது:

கிராமப்புறங்களில் படிக் கும் சிறுபான்மையின மாணவிகள் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஊக்கத்தொகையாக 3-5 வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ.500-ஆம், 6-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.1,000-ஆம் வழங்கப்படும். இதற்காக ரூ.2.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் தகுதி வழங்குவதற்கான வழிமுறைகள் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் உருவாக்கப்பட்டு, இத்துறை மூலம் செயல் படுத்தப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் மட்டுமின்றி, மாநில அளவிலும் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா டிச.18-ஆம் தேதி கொண்டாடப்படும். உலமா ஓய்வூதிய தாரர் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமையால் வாடாமல் இருக்கும் வகையில், அக்குடும்பத்துக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment