சென்னை, ஏப்.19 இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 30 ஆக பதிவாகியிருந்த நிலையில், நேற்று தொற்று பாதிப்பு சற்று குறைந்தது.
நேற்று (18..4.2022) புதிதாக 16 ஆண்கள், 11 பெண்கள் என மொத்தம் 27 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 15 பேர் உள்பட 7 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 31 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment