சென்னை, ஜூலை 2- இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் தற்காலிக நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக 13,331 இடங்களில் பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தது.
இவ்வாறு, நிரப்படும் பணியிடங் களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேவி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்க ளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது. மாநில அரசு மற்றும் கல்வித்துறையின் இந்த அறி விப்புக்கு ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கண் டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், 13,331 தற்காலிக ஆசிரியர் பணியை திரும்பப் பெற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என்று சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறையின் இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு அலுவலர் இளம் பகவத், பள்ளி மேலாண்மை குழு வழியாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதி தேர்வு பெற்ற வர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வ லர்களுக்கு முன்னுரிமை வழங்க தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமைகள் எதனையும் பின்பற்றாமல் தங்களது விருப்பப்படி ஆசிரியர் நியமனம் செய்யப் படுவதாக தகவல்கள் வருகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதி பெற்ற நபர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார் வலர்களுக்கு எவ்வாறு முன் னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விரிவான தெளிவுரைகள் வழங்கப்படும் வரை தற்காலிக ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கூடாது. இதுகுறித்த தெளி வுரைகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதற்குப் பிறகு உரிய முன்னுரிமை களை பின்பற்றி தகுதியுள்ள அனைவருக்கும் வாய்ப்பளித்து தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment