அதிர்ச்சித் தகவல் 6,700 ஊழல் வழக்குகள் தேக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

அதிர்ச்சித் தகவல் 6,700 ஊழல் வழக்குகள் தேக்கம்

புதுடில்லி, ஆக.26 சி.பி.அய். தொடுத்துள்ள 6,700 ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவை யில் இருப்பதாகவும், 275 வழக்குகள் 20 ஆண்டுகளாக தேங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள் ளது.  அதில் இடம் பெற் றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:- 

* சி.பி.அய். தொடுத் துள்ள வழக்குகளில் ஏறத்தாழ 6,700 ஊழல் வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. அவற்றில் 275 வழக்குகள், 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கின்றன. 

* 1,939 வழக்குகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரையும், 2,273 வழக்குகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையும், 811 வழக்குகள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை யும், 1,399 வழக்குகள் 3 ஆண்டுகளுக்குள்ளும் தேங்கி உள்ளன. இது, கடந்த ஆண்டு டிசம்பர் 31 நிலவரம். 

 9.935 மேல்முறையீட்டு வழக்குகளில் 9,698 நீதிமன்றங்களிலும், 237 உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. 1.099 மறு ஆய்வு முறையீடுகளும் நீதிமன்றங்களில் தேங்கி உள்ளன. 

* 10 ஆயிரத்து 974 மேல் முறையீடு மற்றும் மறு ஆய்வு முறையீடுகளில் 361 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், 558 வழக்குகள் 15 ஆண்டு களுக்கு மேலாகவும், 1,749 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 3,665 வழக் குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும், 2,818 வழக்குகள் 2 ஆண்டுகளுக்கு மேலாக வும், 1,823 வழக்குகள் 2 ஆண்டுகளுக்குள்ளும் நிலுவையில் உள்ளன. 

* 645 ஊழல் வழக்குகளில் சி.பி.அய். விசாரணை நடத்தி வருகிறது. இவற்றில் 35 வழக்குகளில் விசாரணை 5 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது. 

* 2021ஆ-ம் ஆண்டு 549 சிவில் சர்வீசஸ் (அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அய்.எப்.எஸ்) அதிகாரிகள் மீதும், 221 அரசிதழ் பதிவு பெற்ற (கெஜட்டட்) அதிகாரிகள் மீதும் சி.பி.அய். வழக்கு பதிவு செய்துள்ளது. 

* சி.பி.அய். அதிகாரி களுக்கு எதிராக 75 வழக் குகள் துறைசார் விசாரணை யின் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment