சோழிங்கநல்லூர் மாவட்டத்தில் பெரியார் 1000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

சோழிங்கநல்லூர் மாவட்டத்தில் பெரியார் 1000

22.8.2022 அன்று காலை 11 மணியளவில் பெரியார் 1000 வினா விடை தேர்வு சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக சார்பில் கோவிலம்பாக்கம்  அரசு உயர்நிலைப்பள்ளியில் நடை பெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர்,துணைத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெரு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்வை சிறப்பாக நடத்தி முடித்து கொடுத்தனர். சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி தலைவர் நித்தியானந்தம்,கோவிலம்பாக்கம் ஆனந்தன் ஆகியோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெரு மக்களுக்கு நன்றி கூறி விடைபெற்றனர்.


No comments:

Post a Comment