'கடவுள் உபயம்' கோவில் தேர் குடை சாய்ந்து பக்தர் காயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 7, 2023

'கடவுள் உபயம்' கோவில் தேர் குடை சாய்ந்து பக்தர் காயம்

கள்ளக்குறிச்சி, ஏப்.7 கள்ளக்குறிச்சியில் உள்ள திருக்கோவிலூர் பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. பங்குனி பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 29-ஆம் தேதி கோவில் துவங்கி தொடர்ந்து தினந்தோறும்  தேரோட் டம் நடை பெற்று வந்தது.  அலங் கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் சிலையை இழுத்து வந்தனர். அப் போது அங்கு இருந்த மரம் ஒன்றில் தேரின் குடை பட்டு கழண்டு கீழே விழுந்தது, முதலில் அங்குஇருந்த மின்சாரக் கம்பியில் விழுந்தும் பின்னர் கீழே விழுந்தது, கோவில் தேரோட்ட நிகழ்வில் கலந்துகொண்டு இருந்த ஒரு நபர் மீது கோவில் குடை விழுந்து தலை மற்றும் தோளில் காயமடைந்தார். அவரை உடனடி யாக முதலுதவி செய்து மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


No comments:

Post a Comment