தமிழறிஞர் அண்ணல் தங்கோவுக்கு குடியாத்தத்தில் உருவச் சிலை: தமிழ்நாடு முதலமைச்சருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

தமிழறிஞர் அண்ணல் தங்கோவுக்கு குடியாத்தத்தில் உருவச் சிலை: தமிழ்நாடு முதலமைச்சருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு

சென்னை, மே 6-தமிழ்மொழி மீது தீராத பற்றுக் கொண்டு, வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தியும், கள்ளுக் கடை மறியல், வைக்கம், சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாக்கிரகம் மற்றும் நீல் சிலை சத்தியாக்கிரகம் ஆகிய போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறைத் தண்டனை பெற்று மடிந்த தமிழறிஞர் அண்ணல் தங்கோவின் உருவச் சிலை வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று அறிவித் தமைக்காக அண்ணல் தங்கோ குடும்பத்தினர் ஜெ. தமிழ்ச் செல்வன், ஜெ.அருள்செல்வன், கே. கந்தன், டாக்டர் தில்லைவாணன், பி. ஜவகர், இந்துமதி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களை 4.5.2023 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


No comments:

Post a Comment