முதல்-அமைச்சர் குறித்து அவதூறா? எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை: தி.மு.க. அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 17, 2023

முதல்-அமைச்சர் குறித்து அவதூறா? எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை: தி.மு.க. அறிவிப்பு

சென்னை, ஜூன் 17- முதல்-அமைச்சர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. அறிவித்து உள்ளது.

நெஞ்சு வலி

இது தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட காணொலியில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் மீது சேற்றை வாரி இறைப்பதை போல பொய்யையும், புனைசுருட்டையும் அள்ளி விட்டிருக் கிறார். அமலாக்கத்துறை வழக்கு குறித்து நாங்கள் எதுவும் சொல்ல வில்லை. செந்தில் பாலாஜியை எப்படி நடத்தினார்கள் என்பது குறித்தே எங்கள் தலைவர் கருத்து தெரிவித்தி ருந்தார். ஆனால், எடப்பாடி பழனி சாமியோ சட்ட மேதையைப்போல பேசியிருக்கிறார். அமலாக்கத்துறையின் 18 மணி நேர விசார ணையின்போது செய்த சித்ரவதை காரண மாகவே செந்தில்பாலாஜி உடல்நலம் பாதிக்கப்பட்டது.

நெஞ்சு வலி ஏற்பட அமலாக்கத் துறையே காரணம். இதுதான் உண்மை. ஆ.ராசா கைதை கண்டித்து உளறி கொட்டியிருக்கிறார் எடப்பாடி பழனி சாமி. ஆ.ராசா கைது குறித்து தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டதை மறைத்து பேசி இருக் கிறார். இல்லாத கட்டுக்கதைகளை அள்ளி விடும் எடப்பாடி பழனிசாமி, கனிமொழி கைது செய்யப்பட்டபோது, மு.க.ஸ்டாலின் சென்று பார்க்கவில் லையே என்கிறார்.

சட்டப்படி நடவடிக்கை

2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு கனி மொழியை திகார் சிறைக்கு நேரில் சென்று மு.க.ஸ்டா லின் சந்தித்தார். பின்னர் ஆ.ராசாவையும் சந்தித்தார். கனிமொழியும், ஆ.ராசாவும் டில்லியில் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், செந்தில் பாலாஜியின் கைது சென்னையில் நடந்துள்ளது.

ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனி சாமிக்கு அருகதை இல்லை. முதல்-அமைச் சருக்கு, செந்தில் பாலாஜி பணம் கொடுத் ததாக எடப்பாடி பழனி சாமி சொல்கிறார். அவர்மீது சட்டப் படி நடவடிக்கை எடுப் போம்.

4 ஆண்டு சிறை தண்டனை பெற்று, ரூ.100 கோடி அபராதம் விதிக்கப் பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று சவால் விடுகிறார் எடப்பாடி பழனி சாமி. ஆமாம், யாராலும் அழிக்க முடி யாது என்று சொல்லிவிட்டு பழனி சாமியே அ.தி.மு.க.வை அழித்து விடுவார். துணிவு, நேர்மை இவையெல் லாம் என்னவென்றே தெரியாத எடப் பாடி பழனிசாமி எங்கள் தலைவர் பதற் றத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார்.

தன் ஆட்சிக்காலம் முழுவதும் பதற்றத் திலேயே இருந்து இப்போது இந்த தற் காலிக தலைமை பதவிக்காக பதற்றத் துடனேயே பணிந்து, குனிந்து, வளைந்து இருப்பவர்தான் எடப்பாடி பழனிசாமி என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

பச்சோந்தித்தனம்

“தி.மு.க., ‘ரெய்டு’, மிசா உள்ளிட்ட அனைத்தையும் சந்தித்த இயக்கம். எனவே இந்த இயக்கம் எப்போதும் அவருக்கு துணை நிற்கும்“ என்பதை எடுத்துக்கூறவே முதல்-அமைச்சர், செந் தில் பாலாஜியை சந்தித்தார். ஆனால் அந்த சந்திப்புக்கு காரணமாக கற்பனைக் கதைகளை எல் லாம் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நடவடிக்கைளால் தி.மு.க.வுக்கு எந்த சிக்கலும் வரப்போவதில்லை. ஏனென் றால் எங்களுக்கு ‘மடியில் கனமில்லை வழியில் பயமில்லை எனும் அளவிற்கும் ‘மிஸ்டர் கிளீன்’ என்று பெயரெடுத் தவர்தான் எங்களது தலைவர் மு.க.ஸ்டா லின். எனவே எங்களுக்கு பதற்றம் ஏற்படுவதற்கான தேவையேயில்லை.

அமலாக்கத்துறையின் நோக்கமே முறைகேடான முறையில் செந்தில் பாலாஜியை டில்லிக்கு கொண்டு செல் வதாகத்தான் இருந்துள்ளது என்பதா லேயே முதல்-அமைச்சர் நேரில் சென் றார். இப்போதும் சட்ட ரீதியாகவே அமைச்சரின் சிகிச்சை மற்றும் பாது காப்புக்காக உயர்நீதிமன்றத்தை நாடி உத்தரவுகளை பெற்றிருக்கிறோம். 

ஆனால், எடப்பாடி பழனிசாமி இதை எல்லாம் இட்டுக்கட்டி ஏதோ பச்சோந்தி என்றெல்லாம் பேசி இருக் கிறார். நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் அது தமிழ்நாட்டு மக் களின் நலனுக்காகவே இருக்கும் என் பது நாடறிந்தது.

எனவே, பச்சோந்தித்தனம் என்பது பிறவி குணம்; அது எடப்பாடி பழனி சாமிக்குத் தான் உள்ளதே தவிர, தி.மு.க.வுக்கு இல்லை. இது கொள்கை உணர்வுமிக்க கட்சி. அதை அறிஞர் அண்ணா உருவாக்கியபடி முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னேற்றி செல்கிறார். எனவே எடப்பாடி பழனிசாமி வாயை பொத்திக்கொள்வதே அவருக்கு நலம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment