கலிபோர்னியா, மே 17 கலிபோர்னியா பயோடெக் நிறுவனம், கரோனா வைரஸ் தொற்று நோயை 100 சதவீதம் தடுக்கக்கூடிய ஆன்டி பாடியைக் கண்டுபிடித்து உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பயோடெக் நிறுவனத்தின் கரோனா வைரசுக்கு எதிரான ஒரு ஆன்டிபாடியைக் கண்டுபிடித்துள்ளனர், இது கரோனா வைரஸை முற்றிலும் தடுக்கிறது.
சான்டியாகோவை தளமாகக் கொண்ட சோரெண்டோ தெரபியூடிக்ஸ் பயோடெக் நிறு வனம் அதன் எஸ்.டி.ஐஅய்-1499 என்ற ஆன்டிபாடி மருந்து 100 சதவீதம் ஆரோக்கியமான மனித உயிரணுக் களில் கரோனா வைரஸை நுழைவதைத் தடுத்தது பரிசோதனையில் தெரியவந்து உள்ளதாக கூறி உள்ளது. சோரெண்டோ வெளியிட்டு உள்ள அறிக் கையில் ஒரு மாதத்திற்கு 200,000 டோஸ் ஆன்டிபா டியை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறி உள்ளது.
சோரெண்டோ நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (எஃப்.டி.ஏ) அவசர ஒப்புதலுக்காக மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் சோரெண்டோவுக்கான பங்குகள் கிட்டத்தட்ட 220 சதவிகிதம் உயர்ந்துள்ளன.
சோரெண்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஹென்றி கூறியதாவது:- ஒரு சிகிச்சை இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும் புகிறோம். இது100 சதவீதம் வேலை செய்யும, தீர்வு இருக்கிறது. கரோனா வைரஸை இந்த மருந்து சுற்றி வளைக்கிறது. இது வைரஸைச் சுற்றிக் கொண்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றும். ஆன்டி பாடி ஒரு வைரஸை மனித உயிரணுக்களில் நுழைவதைத் தடுக்கும் போது, வைரஸ் உயிர்வாழ முடியாது. வைரஸ் செல்லுக் குள் செல்ல முடியாவிட்டால், அதனால் நகலெ டுக்க முடியாது. ஆகவே, வைரஸ் உயிரணுக் களைப் பெறுவதைத் தடுத்தால், வைரஸ் இறு தியில் இறந்துவிடும். உடல் அந்த வைரஸை வெளியேற்றுகிறது.
உங்கள் உடலில் நடுநிலையான ஆன்டிபாடி இருந்தால், உங்களுக்கு சமூக விலகல் தேவை யில்லை. நீங்கள் பயமின்றி ஊரடங்கை தளர்த்த முடியும். எஸ்.டி.அய்-1499 என்பது கலவை ஆன்டி பாடியாக இருப்பதற்கான தெளிவான முதல் மருந்தாகும். எங்கள் எஸ்.டி.அய் -1499 ஆன்டிபாடி விதிவிலக்கான சிகிச்சை திறனைக் காட்டுகிறது, மேலும் தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல் களைப் பெற்றதைத் தொடர்ந்து உயிர்களைக் காப்பாற்ற முடியும்' என்று டாக்டர் ஜி கூறினார்.
இந்த நிறுவனத்தின் ஆன்டிபாடி இன்னும் மக்களிடம் சோதிக்கப்படவில்லை, எனவே இது மனித உடலுக்குள் எவ்வாறு நடந்து கொள்ளக் கூடும் மற்றும் அதன் சாத்தியமான பக்க விளை வுகள் முற்றிலும் தெரியவில்லை.
No comments:
Post a Comment