புதுடில்லி, மே26 கரோனாவுக்கு எதிரான போரில், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள். இதற்கிடையே, மேற்கு வங்காள மாநில மருத்துவமனைகளில் சமீபத்தில் 600க்கு மேற்பட்ட செவிலியர் பணியிலிருந்து விலகி, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர்.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த சுமார் 200 செவிலியர் கடந்த சில நாட்களில் பணியிலிருந்த விலகியுள்ளனர். அத்துடன், அவர்கள் கேரளாவுக்கு திரும்பி சென்று விட்டனர்.
No comments:
Post a Comment