சோனியா காந்தி கண்டனம்
புதுடில்லி,ஜூன்17, பெட் ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிட் டிருப்பதாவது:- பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துவ துடன் கூடுதல் சுமையையும் ஏற்படுத்துகிறது. தற்போதைய விலை உயர்வை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. கரோனாவின் பொருளாதார தாக்கத்தால் லட்சக் கணக்கானவர்கள் வேலைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து உள்ளனர். வணிக மற்றும் சிறியது, நடுத்தர வர்க்கத்தின் வருமானத்தை விரைவாக அரிக்கும் ஒரு நேரத்தில், அரசு ஏன் இத்தகைய விலை உயர்வை கூட கருத்தில் கொள்ளவில்லை. கச்சா எண்ணெயின் சர்வதேச விலை கடந்த வாரத்தை விட தோராயமாக ஒன்பது சதவிகிதம் குறைந்து உள்ளது (கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது), அரசாங்கம் தனது மக்களிடம் லாபம் ஈட்டுகிறது என்பதை தவிரஒன்றும் செய்யவில்லை. தவறான அறிவுறுத்தல்களால் கிட்டத்தட்ட 2,60,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை ஈட்ட அரசு முயல்கிறது, நியாயப்படுத்தவோ பொருத்த மானதாகவோ இது இல்லை. இது மக்களுக்கு கூடுதல் சுமையை கொடுக்கும். கடந்த ஆறு ஆண்டு வரலாற்றில் எண்ணெய் விலை குறைந்த போதிலும், 12 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியின் ஒட்டுமொத்த அதிகரிப்பால் அரசின் வருவாய் "பெருமளவில் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் உயர்வைத் திரும்பப் பெறவும், குறைந்த விலையின் நன்மைகளை மக்களுக்கு வழங்கவேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவம் பார்ப்பதைத் தவிர
புதுச்சேரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை
புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரி,ஜூன்17 புதுச்சேரியில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து வந்தது. இந் நிலையில் கடந்த சில நாட்களாக புதுச் சேரியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்பவர்களுக்கு அதிக அளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனால் வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்குச் செல்ல கட்டுப்பாடுகளை விதிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட் டுள்ள அறிவிப்பில் மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து, புதுச் சேரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியைச் சுற்றியுள்ள மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர் களை இ-பாஸ் இருந்தாலும் புதுசேரிக்குள் அனுமதிக்க முடியாது என்றும் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment