* சென்னையில் அடுத்த ஒரு வாரத்தில் கரோனாவால் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
* மீண்டும் ஊரடங்கு உள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி - தமிழ்நாடு அரசிடம்.
* கரோனா காய்ச்சல் காரணமாக சென்னை புறநகர்ப் பகுதிகளில் வீடுகள் காலியாகின்றன.
* இரவு நேரங்களில் பேருந்து, லாரி போக்குவரத்துகளைத் தடை செய்யக்கூடாது என்று மத்திய அரசு ஆணை.
* தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம். செயலாளராகவிருந்த டாக்டர் பீலா ராஜேஷ், வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளராக மாற்றம்.
* அமெரிக்காவில் வெளிநாட்டினரை வேலைக்கு அனுமதிக்கும் விசா ரத்து செய்யப்படுவது குறித்து அதிபர் டிரம்ப் பரிசீலனை.
* கரோனாவால் மரணம் அடைந்தோர் உடல்களை அவமதிப்பதா என்ற வினாவை எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.
* கரோனா தொற்றால் உலகளவில் 100 கோடி மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுவர்.
* கரோனா வைரஸ் மூலக்கூறு - இசுரேலில் கண்டுபிடிப்பு (விரைவில் தடுப்பூசி வர வாய்ப்பு).
No comments:
Post a Comment