நேபாளம், ஆக. 15- நேபாளத் தின் வடக்கு மத்திய பகுதி யில் அமைந்த சிந்துபால் சோக் நகரில் லிடிமோ லாமா டோல் மற்றும் ஜுகல் கிராம பகுதி களில் வெள்ளியன்று காலை ஏற் பட்ட நிலச்சரிவில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப் பகுதி உள்ளூர்வாசிகள் இணைந்து மீட்பு பணியில் ஈடு பட்டனர். இதில் நிலச் சரிவில் சிக்கி பலியான 5 பேரது உடல்கள் மீட்கப் பட்டன. 38 பேரை காண வில்லை. அவர்களை தேடும் பணி யில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடந்த ஜூலை இறுதியில் 113 பேர் பலியாகி இருந்த னர். 67 பேர் காயமடைந்து இருந்தனர். 38 பேரை காண வில்லை என அந்நாட்டு உள் துறை அமைச்சக அதி காரி கள் தெரிவித்து இருந்தனர்.
No comments:
Post a Comment