பெரியார் கேட்கும் கேள்வி! (81) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 21, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (81)


நாம் கோவிலுக்குள் போகலாமா, வேண்டாமா என்பதற்கு சர்க்காரிடம் தான் போகிறோம். என் ஜாதி பெரியதா, உன் ஜாதி பெரியதா என்பதற்கு சர்க்காரிடம் தான் போகிறோம். ஏழ்மைப்பட்ட தேசத்து “பொது ஜனங் களின் பணம் வருஷம் ஒண்ணரைக் கோடி ரூபாயுக்கு மேல் மதத்தின் பேரால் வசூலித்து அயோக்கியர்களுக்கும், பஞ்சமா பாதகத்துக்கும் உபயோகப்படுத்துவதைக் கவனிக்க ஒரு சட்டம் வந்தால் அது கூடாது” என்று சொல்லுபவர்கள் யோக்கியர்களா? நமக்குள் நாமே பார்த்துக் கொள்ளக்கூடாதா என்றால் இது விஷயத்தில் நமக்குள் என்ன யோக்கியப் பொறுப்பு இருக்கிறது?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 21.11.1925


‘மணியோசை’


No comments:

Post a Comment