பிராமணர்கள் தமிழர்களானால், தமிழர் நூல்களன்றோ அவர்களுக்கு முதல் நூல்களாக இருக்க வேண்டும்! வேதத்தைப் பிராமணர்கள் முதல் நூலாகவும் ஆதார மாகவும் கொள்வதேன்? பிராமணர் தமிழரானால், சமஸ்கிருதத்துக்கு அவர்கள் உயர்வு கற்பிப்பதேன்? தமிழ் நூல்கள் எல்லாம் வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவைகளே எனப் புனைந்து கூறுவதேன்? பிராமணர் தமிழர்களானால், அவர்கட்கு மட்டும் தனி சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள் ஸ்தாபித்திருப்பதேன்? அப்பள்ளிக்கூடங்களில் தமிழர்கட்கு அனுமதியளியாத தேன்? வேதமோதத் தமிழர்க்கு உரிமையில்லையெனக் கூறுவதேன்?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 21.11.1925
‘மணியோசை’
No comments:
Post a Comment