நம்மில் ஒரு சிலர் நெஞ்சுரமில்லாததாலும், நேர்மைக் குணமில்லாததாலும், பேராசையாலும், சமூகத்தை விற்றாவது தாம் வாழ்வது குற்றமன்று என்று கருதி எதிரிகட்குக் கையாளாகி அவர்கள் பின்னின்று தாளம் போடுவதாலேயே நமது எதிரிகள் நமது உரிமைகளைப் பெற நாம் முயற்சிப்பதை வகுப்புவாதம் என்று சொல்லத் துணிந்து விட்டனர். நாம் இந்த நாட்டின் எந்த ஒரு தனி வகுப்பிற்கோ சிறுபான்மை ஜாதிக்கோ தனி உரிமைகள் வேண்டுமென்று கேட்கின்றோமா? அல்லது நம்மில் எந்தக் கூட்டத்தாராவது இந்நாட்டிலுள்ள எல்லோரினும் தாங்களே உயர்ந்த ஜாதியினராதலால் தனிச் சலுகை தங் களுக்குக் காட்டப்பட வேண்டுமென்று கேட்கின்றோமா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 21.11.1925
‘மணியோசை’
No comments:
Post a Comment