சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளருக்கு மனித உரிமை ஆணையம் தாக்கீது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 26, 2020

சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளருக்கு மனித உரிமை ஆணையம் தாக்கீது

சிவகங்கை,ஆக.26 சிவகங்கை மாவட்டத்தில் வழக்கு ஒன்றில்  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  பூலாங்குறிச்சி காவல் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வம் கலந்து கொண்டார். இந்நிலையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆணைய பொறுப்பு தலைவரான துரை.ஜெயச்சந்திரன் விசாரணைக்கு எடுத்துள்ள இந்த விவகாரம் குறித்து சிவகங்கை மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தாக்கீது அனுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment