ஒசூரில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 13, 2020

ஒசூரில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


புதிய கல்விக்கொள்கையைக் கண்டித்தும், சுற்றுச்சூழல் தாக்க வரைவுச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும் ஓசூர் ராம்நகரில் 11.8.2020 அன்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு க.இரா.தமிழரசன், (தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்) தலைமை ஏற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வனவேந்தன், மாவட்டச் செயலாளர் சின்னசாமி,  ம.இராமச்சந்திரன் (ஒசூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), ஆனந்தகுமார் (மாவட்டத் தலைவர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி), ஆசிப், தப்ரீஸ் ஆலம்,  (தமிழ் நாட்டுக் கல்வி இயக்கம்  ஒப்புரவாளன்) ஆகியோர்  கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். பெரியார் உணர்வாளர் கூட்டமைப்புப் பொறுப்பாளர் ஹரிபிரசாத்  நன்றி கூறினார்.


No comments:

Post a Comment