கடலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 16, 2020

கடலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் விழா

கழகக் கொடியேற்றங்கள் - மோட்டார் சைக்கிள் ஊர்வலம்


கடலூர் பெரியார் சிலைக்கு மாலை, வடலூர், குறிஞ்சிப்பாடி, ஆடூர் அகரம், அப்பியம்பேட்டை, சமத்துவபுரம், ஜோதி நகர் ஆகிய இடங்களில் மாலை அணிவிப்பு.


ரோட்டு மருவாய், வடக்குத்து, இந்திரா நகர், நெய்வேலி, கடலூர், குறிஞ்சிப்பாடி, சாவடி, பொட்டவெளி, ஆடூர் அகரம், வேகாக்கொல்லை, மெயின்ரோடு, சத்திரம் குறுக்கு சாலை, அப்பியம்பேட்டை மெயின்ரோடு, நடுவீரப்பட்டு, திரு வடிகை, ஆபத்தாரனபுரம், ஜோதி நகர், வடலூர் சிப்காட், ஆயிகுப்பம் ஆகிய இடங்களில் கழக கொடியேற்றப் படும்.


இந்நிகழ்ச்சிகள் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தலைமையில் மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலாளர் தென்சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மண்டல செயலாளர் தாமோதரன், மண்டல மகளிரணி செயலாளர் ரமா.பிரபா, மண்டல இளைஞரணி செயலாளர் பஞ்சமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இரு சக்கர வாகனத்தில் ஏராளமான இளை ஞர்கள், கழகத் தோழர்கள் ஊர்வலமாகச் சென்று பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.


No comments:

Post a Comment