கழகத் தோழர்களே, பங்கேற்பீர்!
தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானித்தபடி - வேளாண் விரோத சட்டங்களைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் வரும் 28.9.2020 காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தின் அருகில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பங்கேற்க உள்ளார்.
எங்கெங்கெல்லாம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் திராவிடர் கழகத் தோழர்கள், கழகக் கொடியுடன் திரளாகப் பங்கேற்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை நிலையம், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment