சேலம் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 10, 2020

சேலம் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல்

சேலம், செப். 10- சேலம் மண் டல திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் காணொலி வாயிலாக 6.9.2020 ஞாயிறு மாலை 6 மணி அளவில் நடைபெற்ற.


கடவுள் மறுப்பு ஆசிரியர் முருகானந்தம் கூறினார். கலந் துரையாடல் கூட்டத்திற்கு கவிஞர் சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். விடு தலை சந்திரன் வரவேற்றார்.


கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் தொடக்க உரையாக அறிவு லக ஆசான் தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் கொண்டாடுவது குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பணிகள் குறித் தும் மிக சிறப்பான உரை நிகழ்த்தினார். கரோனா நோய்த்தொற்று காலத்தில் எதிரிகள் எவ்வாறெல்லாம் இந்த காலத்தைப் பயன்படுத் திக் கொள்கிறார்கள் என்ப தைக் கருத்தில் கொண்டு கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும். தமிழ்நாடெங்கும் சுவரெழுத்து பிரச்சாரம் மிகத் தீவிரமாக இருக்கிறது. இந்த நிலையில் சேலம் மண் டலத்தில் மிகச் சிறப்பாக சுவரெழுத்து பணியிருக்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.


மேட்டூர் மாவட்டத் தலை வர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி செயலாளர் கா.நா.பாலு ஓம லூர் சவுந்தரம், வெள்ளாறு ராஜேந்திரன், ஆசிரியர் மதி, பூசாரிப்பட்டி ஜெயபால், ஆத்தூர் மாவட்டத் தலைவர் வானவில், மாவட்டச் செய லாளர் சேகர், மாநில ஆசிரி யர் அணி அமைப்பாளர் தமிழ்பிரபாகரன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சுரேஷ், பொதுக் குழு உறுப்பினர் தம்மம்பட்டி ஜெயராமன், தம்மம்பட்டி விக்னேஸ்வரன், சிங்கபுரம் கூத்தன், பொதுக்குழு உறுப் பினர் வாழப்பாடி அமிர்தம், சுகுமார், சேலம் மாவட்டத் தலைவர் ஜவகர், இளவழகன், இளவரசன், மண்டல மாண வர் கழகச் செயலாளர் தமி ழர் தலைவர், பா.வெற்றி, மகளிரணி சுஜாதா மற்றும்  தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தந்தை பெரியார் 142 ஆவது பிறந்த நாள் விழாவை சேலம் மண்டலம் முழுக்க அவரவர் பகுதியில் சுவரெ ழுத்துப் பிரச்சாரம் செய்து அய்யா பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடுவ தென தீர்மானிக்கப்பட்டது.


இறுதியாக மாநில மாண வர் கழகச்செயலாளர் செந் தூர்பாண்டியன், மண்டலத் தலைவர் சி.சுப்பிரமணியம், மண்டலச் செயலாளர் விடுதலை சந்திரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், பொதுக் குழு உறுப்பினர் பழனி.புள் ளையண்ணன் உரை நிகழ்த் தினார். மண்டல இளைஞ ரணி செயலாளர் செல்வம் நன்றி கூறிட கூட்டம் இனிதே நிறைவுற்றது.


No comments:

Post a Comment