அக்டோபரில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் : தலைமைச் செயலர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 5, 2020

அக்டோபரில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் : தலைமைச் செயலர் தகவல்

சென்னை,செப்.5, அக்டோபர் மாதத்தில் கரோனா பாதிப்பு அதிக ரிக்கும் என்பதால் தடுப்பு நடவடிக் கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சி யர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம் அறிவுறுத்தல் வழங்கி யுள்ளார்.


தமிழகத்தில் 8ஆம் கட்டமாக செப்.30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் களுடன் தலைமைச் செயலர் கே.சண் முகம் நேற்று (4.9.2020) ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:


கரோனாவை கட்டுப்படுத்துவதில் நாம் அபாயகரமான கட்டத்தில் உள்ளோம். செப்.1ஆம் தேதி முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலை யில், கரோனா தொற்றின் மிகவும் மோசமான நிலை இனிமேல்தான் வர உள்ளது.


தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பொது போக்கு வரத்து, வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அக் டோபர் மாதம் கரோனா தொற்று உச்சத்துக்கு செல்லும். பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், சுய சுத்தம் இவற்றில் கவனம் செலுத் துவதை தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும்.


அறிகுறி தென்பட்டால் உடனடி யாக பரிசோதனை செய்ய அறிவுறுத்த வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பொது இடங்கள், பணிபுரியும் இடங்கள், உணவகங்கள் பேருந்து நிலையங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவ துடன், அடிக்கடி அந்த இடங்கள் சுத்தப் படுத்தப்பட வேண்டும்.


நோய் கட்டுப்பாட்டுப் பகுதி மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசே பரிசோ தித்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கும் நிலையை மாற்றி மக்களே வந்து பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை பெறும் நிலையை உருவாக்க வேண்டும். தேவைப்பட்டால் கிராமப்புற, நகரப் புறங்களில் அதிக அளவில் கரோனா பரிசோதனைக்கான மாதிரி சேகரிப்பு மய்யங்களை உருவாக்க வேண்டும்.


பாதிக்கப்பட்ட பகுதியில் அதிக பரிசோதனை செய்வது, காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத் துவது மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைக்க முடியும்.


இவ்வாறு பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.


No comments:

Post a Comment