எழுவர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநர், உள்துறை அமைச்சருக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 6, 2020

எழுவர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநர், உள்துறை அமைச்சருக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம்


சென்னை,நவ.6,  05.-11.-2020 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அத்துடன் அக்கடிதத்தின் நகலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.


கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:


வணக்கம். தாங்கள் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு- சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் திருமதி நளினி, திருவாளர்கள் வி.சிறீகரன் என்ற முருகன், சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற் றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள்.


ஈடு செய்ய முடியாத துன்பம்


ஆனால், அவர்களை விடுவிக்க அ.தி.மு.க, அரசு பரிந்துரைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன் றத்தின் உத்தரவின் அடிப்படையிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் அழுத்தத்தின் விளைவாக வும், ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று 9.9.2018 அன்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, தங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்தது. மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள சட்டங்களின் கீழான குற்றங்களுக் காகத் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யவோ- அந்த தண் டனையை நிறுத்தி வைக்கவோ- அல்லது குறைக்கவோ, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் படி, மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.  ஆனால், ஏழு பேரை விடுதலை செய்யக் கோரும் மாநில அரசின் இந்த முக்கியப் பரிந்துரை யானது, தங்களால் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவை யில் வைக்கப்பட்டுள்ளது- அந்த ஏழு பேருக்கும், ஆற்றொணாத் துயரத் தையும், ஈடுசெய்ய முடியாத துன்பத் தையும் ஏற்படுத்தி வருகிறது.


உச்சநீதிமன்றம்


சுட்டிக்காட்டியிருக்கிறது


அரசியல் சட்ட பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண் டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை. அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் பெற்ற வர்கள் முடிவு எடுப்பதில் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும்- அப்படித் தவிர்க் கவில்லையென்றால் அந்த பதவியில் இருப்போருக்கு உச்சநீதிமன்றமே வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்றும் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.


ஏழு பேரில் ஒருவரான திரு. பேரறிவாளன் 21.01.2020 அன்று தாக்கல் செய்த எஸ்.எல்.பி. மீதான உத்தரவில் "இரு வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைக்கிறோம். 2014-ஆம் ஆண்டு ரிட் மனு (குற்றவியல் வரம்பு) 48-இன் மீது, 6.9.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப் படையில் - மனுதாரரின் (பேரறிவா ளன்) அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் படி முன்வைத்த கோரிக்கை தொடர்பாக,  தமிழக அரசு ஏதாவது முடிவெடுத்துள்ளதா என்பதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்”  என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ


அண்மையில், 3.11.2020 அன்று இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்த போது - உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ் வுகள் அனைத்தும் பொதுவெளியில் செய்திகளாக வெளிவந்துள்ளன. மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல்- தங்கள் அலு வலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டி ருப்பது - சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெற வில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.


ஆகவே அந்த தோற்றத்தை நீக்கிட, தமிழக அமைச்சரவையின் 9.9.2018-ஆம் தேதியிட்ட பரிந் துரையைப் பரிவுடன் ஏற்று - திருமதி. நளினி, திருவாளர்கள் வி.சிறீகரன் என்ற முருகன், சாந்தன், பேரறி வாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையைக் குறைத்து - உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப் பிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment