அரசு இ-சேவை ஏட்டளவிலேயே உள்ளது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 21, 2020

அரசு இ-சேவை ஏட்டளவிலேயே உள்ளது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை, நவ. 21- நீலகிரி மாவட்டம் மசினகுடி கிரா மத்தில் டாஸ்மாக் கடைகள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட் டது.  இந்த வழக்கு விசா ரணை நேற்று (நவ.20) எடுத்து கொள்ளப்பட்டது. இதனை விசாரணை மேற் கொண்ட நீதிபதிகள், பொது மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டு வரப்பட்ட அரசு இ-சேவை ஏட்டளவி லேயே உள்ளது என வருத்தம் தெரிவித்தனர். இதேபோன்று பொதுமக்களின் மனுக்க ளுக்கு பதிலளிக்காத அதிகா ரிகளின் மெத்தனப் போக்குக் கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


No comments:

Post a Comment