பிறந்தநாளுக்கு மத்தியில் ஒரு கேள்வியும், மூன்று புத்தகங்களும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 2, 2020

பிறந்தநாளுக்கு மத்தியில் ஒரு கேள்வியும், மூன்று புத்தகங்களும்


கேள்வி: தற்போது தாங்கள் படித்துக் கொண்டிருக்கும் புத்தகங் கள் என்னென்ன?


ஆசிரியர் பதில்: ஒரே நேரத்தில் மூன்று புத்தகங்களைப் (இரண்டு தமிழ்ப் புத்தகங்கள், ஓர் ஆங்கிலப் புத்தகம்) படித்துக் கொண்டிருக்கிறேன். சலிப்பில்லாமல் படிக்க அது ஒரு சிறந்த வழி!




  1. அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா எழுதியுள்ள தன் வரலாற்று நூலான “A Promised Land". அண்மையில் தான் இந்நூல் வெளியாகியுள்ளது.

  2. தெல்ஃபின் மினூய் எழுதி பிரெஞ்சில் வெளியான புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது - சிரியாவின் தலைமறைவு நூலகம் என்ற பெயரில்! மத அடிப் படைவாதிகளின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் அரசியல் செயல்பாடாகவும், ஆதிக் கத்திற்கு எதிரான குறியீடாகவும் பூமிக்கடியில் உருவாக்கப்பட்ட நூலகம் பற்றிய புத்தகம் இது.

  3. தேவதாசி முறை காலமும் கருத்தும் என்ற தலைப்பில் முனைவர் கல்யாணி பிரபாகரன் எழுதி காவ்யா பதிப்பகம் வெளி யிட்டுள்ள புத்தகம்.


No comments:

Post a Comment