சென்னை,டிச.11, திராவிட மாணவர் கழக போராட்ட நாள் மற்றும் திராவிட நாற்று மின்னிதழ் தொடக்க விழா 1.12.2020 அன்று மாலை 6 மணிக்கு காணொலி மூலம் நடை பெற்றது.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையேற்று உரை யாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் செந்தூர பாண்டியன் அனைவரையும் வரவேற் றார். கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார். கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எப்படி திராவிட நாற்று மின்னிதழ் மூலமாக முறியடிக்கும் விதமாக உலகமெங்கும் எடுத்துச் செல்லுங்கள் என உற்சாகப்படுத்தி உரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வாழ்த்துரையில் விடுதலை, உண்மை நமது இதழ்களை ஆசிரியரும் தானும் எப்பொழுதும் கவனிப்போம். ஆனால், திராவிட நாற்று மின்னிதழ் மாணவர்களே அதை வடிவமைத்து காட்டுவது அடுத்த தலைமுறைக்கான ஒரு சிந்தனைக் களமாக இருப்பதைக் காண மகிழ்வுடன் இருக்கிறது என வாழ்த்துரையில் கூறினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் திராவிட நாற்று மின்னிதழ் மாத இதழை காணொலியில் வெளியிட்டு வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர்கள் அஜீதன், யாழ் திலீபன், நாத்திக பொன்முடி, ஸ்டார் ஜீவா, இராசி பிரபாகரன், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள் வெற்றி, பிரவீன், தில்ரேஸ், தமிழ்ச்செல்வன், ஓவியா, மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள் மானவீரன், கதிரவன், சூரியகலா, மணிமொழி, கவுதமன், பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர் மருத்துவர் சிகாகோ சோம.இளங்கோவன், கழக துணைப்பொதுச்செயலாளர் இன்பக்கனி, புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் மதுரை வா.நேரு, அமைப்புச்செயலாளர் ஊமை. ஜெயராமன், பிரான்ஸ் தங்க.ரமேஷ், மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, விழுப்புரம் மண்டலத் தலைவர் திண்டிவனம் க.மு.தாஸ், கள்ளக் குறிச்சி மருத்துவர் கோ.சா.குமார், தென்காசி இனியன், வேலூர் தூயவன், தருமபுரி தமிழ்ச்செல்வி, நாகர்கோவில் மணிமேகலை, ஓசூர் துக்காராம், நெய்வேலி வெ.ஞான சேகரன், திருப்பத்தூர் கே.சி.எழில ரசன், அகிலா எழிலரசன், ஓசூர் வனவேந்தன், நாகர்கோவில் தயா ளன், மன்னார்குடி கோவி.அழகிரி, விருதுநகர் விடுதலை ஆதவன், திருச்செங்கோடு சேகர், கும்ப கோணம் தமிழ்மணி, பெரியார்களம் இறைவி, குடந்தை அரவிந்தன், செந்தமிழன், மருத்துவர் சண்முகப்பிரியா, வேலூர் மண்டலத் தலைவர் குடியாத்தம் சடகோபன், ஈஸ்வரி, தாம்பரம் ப.முத்தையன், துரைராஜ், பாலா, வடமணப்பாக்கம் வெங்கட்ராமன், அருணாச்சலம், கள்ளக்குறிச்சி குழ.செல்வராசு, கோபி ராஜமாணிக்கம், திருப்பத்தூர் ஆசிரியர் பழனி, மதுரை செல்லதுரை, ராஜேந்திரன், திருப்பத்தூர் நிலவன், அகரம் மணிமொழி, சுபாஷ், பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன், இந்திராகாந்தி, ஜான்சிராணி, அரங்க.ரவி, கள்ளக்குறிச்சி முனியன், முத்துசெல்வன், மும்பை கணேசன், சிகாகோ சோம.வேலாயுதம், காரைக் குடி பிரவீன், முத்துவேல், நாகை இளமாறன், சென்னை இரா.வில்வ நாதன், இனநலம், செ.பெ. தொண் டறம், பார்த்திபன், பசும்பொன் செந்தில்குமாரி, யாழ்ஒளி, தாம்பரம் நாத்திகன், ஓசூர் கண்மணி, கிருஷ்ண குமார், கோவை சிற்றரசு, ராகுல், கவுதம், யாழினி, தமிழ் நியூட்டன், பழனி, சக்திவேல், ஆகாஷ், திருச்சி யாழினி, பெங்களூர் முல்லைகோ, பி.சி. ஜெயராமன், சதீஸ், திருவண் ணாமலை பட்டாபிராமன், தர்மபுரி தமிழ்ச்செல்வன், தஞ்சை மணிமொழி குணசேகரன் மற்றும் பலர் காணொ லியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் சென்னை
வி.தங்கமணி நன்றி கூறினார்.

No comments:
Post a Comment