பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி சேகரிடம் தமிழர் தலைவர் காணொலி மூலம் உடல்நலம் விசாரித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 15, 2020

பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி சேகரிடம் தமிழர் தலைவர் காணொலி மூலம் உடல்நலம் விசாரித்தார்

பட்டுக்கோட்டை நகரத்தலைவர் பொறியாளர் சிற்பிசேகர் உடல்நலக்குறைவால் அறுவை சிகிச்சை செய்து தஞ்சை சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 15.12.2020 அன்று காலை 11 மணியளவில் கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாணவர் கழகப் பொறுப்பாளர் .காவியன் ஆகியோர் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர். திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிற்பி சேகர் அவர்களிடம் நலம் விசாரித்து ஆலோசனை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment